states

15 வயது சிறுமியை திருமணம் செய்த இந்தி ஆசிரியர்

ஆந்திர மாநிலம் மேற்கு கோதா வரி மாவட்டத்தின் பீமாவரத் பகுதியில் உள்ளது யந்தாகனி ஜில்லா பரிஷத் உயர்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் இந்தி ஆசிரியராக இருக்கும் சோமராஜு (46 வயது), அதே  பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் 15  வயது சிறுமியை மூளைச்சலவை செய்து,  நவம்பர் 19 அன்று தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துள் ளார். திருமணம் செய்தது மட்டு மல்லாமல் சோமராஜு சிறுமியை வெளி யே எங்கும் விடாமல் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்து இருந்தார். சோம ராஜுவின் பிடியில் இருந்து தப்பிய சிறுமி தனது வீட்டிற்குச் சென்று நடந்தவற்றை பெற்றோரிடம் கூறியுள்ளார். சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்தி ஆசிரியர் சோமராஜுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்த னர். இந்த விவகாரம் ஆந்திர மாநிலத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.